Saturday, April 24, 2010

எப்போது நான் வந்தாலும்
மறுத்து பேசாமல்
இனிமையாய் என்னை ஏற்கிறாய்...
உன் மௌனத்தின் அர்த்தம்
என் வரவின் மகிழ்வோ..!


பூமியே...
நம் காதலின் சின்னமே
வானவில்!


சில நேரம்
திக்கு முக்காட செய்வேன்;
சில நேரம்
வரண்டிட செய்வேன்;
பூமியே
உன்னை தினம் தினம்
காக்கும் வானம் நான்..!
உன் ஜன்னலை
தினம் தினம்
தட்ட ஆசைதான்.1
ஆனால்...
என் வரவை எதிர்பார்ப்பவள்
நீ அல்லவா..!
ஏன் ஜன்னலை மூடுகிறாய்..?
மழையே..
என் இறுதி ஊர்வலத்தில்
நீ தலைமையேற்க வேண்டும்...
உன் தழுவலில்
மரணமும் ஜனனம் ஆகும்...
மறந்து விடாதே!
நீ தொட்டு
சென்றப் பிறகு,
மனம் ஆராய சொல்கிறது...
நீ யார் என்று.

இன்று...
வானுக்கும் பூமிக்கும்
திருமணமோ
மழைத் துளிகள்
அர்ச்சனை போடுகின்றன!